Published Date: November 11, 2025
CATEGORY: CONSTITUENCY
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் DEXA ஸ்கேன் கருவியை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் இயக்குனர் சுகந்தி, ராஜகுமாரி, மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் கலந்து கொண்டனர்.
Media: Tamil Sudar